4.9.07

என் கேரள பயணம்.....

சமீபத்தில் ஓணம் பண்டிகையை நேரில் காண கேரளா செல்ல முடிவு செய்தேன். ஆனால் விடுப்பு எடுக்க இயலவில்லை. சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும் கேரளா செல்ல வாய்ப்பு கிட்டியது.

எனது ஜூனியர் மலையாளி பிரோஸ் பாபுவுடன் வெள்ளி அன்று மாலை புறப்பட்டேன். அப்போது நல்ல மழை. நனைந்தவாறே பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.எந்த பேருந்தும் நிற்கவில்லை. பிறகு மீண்டும் வீடு வந்து மிதிவண்டி எடுத்து பேருந்து நிலையம் சென்றேன். பிரோஸ் அங்கே பேருந்தில் காத்திருந்தான். நான் ஏறியவுடன் பேருந்து புறப்பட்டது. இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்து இருந்தால் பேருந்து கிடைத்து இருக்காது.

பேருந்தில் தலை துவட்டிக் கொண்டே அமர்ந்திருந்தேன். படபடப்பு இன்னும் குறையவில்லை.சிறிது நேரத்தில் உறங்கிப்போனேன். திண்டுக்கல் வந்ததும் எழுந்தேன்.மழை இன்னும் குறையவில்லை. பேருந்தை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்தோம். உடன் இன்னொரு மலையாளியும் ஏறினார்.

ரயில் நிலையம் சென்று சீட்டு வாங்கி மூன்றாவது ப்ளாட்பாரம் சென்றோம். எங்கள் பெட்டி தேடி அலைந்தோம். கடைசியில் இடம் கிடைத்து அமர்ந்தோம். பிரோஸ் கடை சென்று தயிர் சாதம் வாங்கி வந்தான். கொட்டும் மழையில் தயிர் சாதம்!!! என்ன செய்வது.... சாப்பிட்டோம். பின்னர் நல்ல உறக்கம்.... காலை ஐந்து மணிக்கு பாலக்காட்டை அடைந்தோம்.

கேரளாவிற்கு பல முறை வந்திருந்தாலும் ஓணத்திற்காக வந்தது இதுவே முதல் முறை.கடவுளின் சொந்த பூமியில் இதோ நுழைகிறேன். அடுத்த இரண்டு மணி நேரப் பயணத்தில் 'நெல்லாயா' என்ற இடத்தை அடைகிறோம். அங்கே பிரோஸ்ஸின் அனியன்(தம்பி) வண்டியுடன் நிற்கிறான். அங்கே ஒரு சாயா கடையில் சாயா அருந்திவிட்டு வண்டியில் அமர்கிறோம். வண்டி இப்போது 'பட்டிசேரி'யை நோக்கி... பிரோஸ்ஸின் சொந்த ஸ்தலம்.வழி நெடுக அழகிய வயல்வெளிகள்...மேடு பள்ளங்கள்... சிறிய வீடுகள்.... இதை எல்லாம் தாண்டி அவன் மன்சிலை(வீடு) அடைந்தோம்.அழகிய செறிய வீடு. ஒரு திவஸம் முழுவதும் அவன் வீட்டில் தாமசித்து இருந்தேன்.

மூன்னு மணிக்கூரும் வித்யஸ்தமாய கேரள பாசகம். நன்னாயிட்டு சாப்பிட்டேன்.பாலக்காடன் மொழி கேட்டேன். முத்தஸ்ஸியோடு சம்சாரித்தேன்.மலையாளம் வாரிகா வாசித்தேன்.

அது ஒரு அசல் கேரள முஸ்லிம் மாப்பிள்ளா குடும்பம். அவர்களின் பழக்கவழக்கங்கள் வித்யாசமாக இருந்தது. அவர்களின் ஆடை, அவர்களின் உணவுகள், அவர்களின் அணுகுமுறை எல்லாமே வித்யாசமாக இருந்தது.

ஆண்கள் என்றால் வெள்ளை நிற நீள முழுக்கை சட்டை, வெள்ளை வேஷ்டி, வெள்ளை தலைப்பாகை என எல்லாமே வெள்ளைதான்.

பெண்கள் என்றால் பல வண்ண கழுத்துப் பட்டை இல்லாத கை வைத்த பனியன், வெள்ளை வேஷ்டி, தலையில் முக்காடு. வேறு ஆண்கள் இருந்தால் சமையல் அறையை விட்டு வெளியே வரமாட்டார்கள்.

அங்கு பெரியவர்களுக்கு நல்ல மரியாதை.

போன வருடம் இறந்த பெரியவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முழுக்க முழுக்க அரபியில். ஸ்வாரஸ்யமாக இருந்தது.



செறுபுழசேரி சென்று நன்றாக சுற்றினோம். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். சேஷம், அவிடெ ப்ளாஸா தியேட்டர் சென்னு 'ஹலோ' என்ன மலையாள சித்ரம் கண்டோம். மோகன்லால் நடித்தது. படம் சுமார்.



அடுத்த திவஸம், புறப்பட்டு ஸ்ரீஜித்தின் வீட்டினு சென்றோம். 'கோட்டக்கல்' அவன்டெ ஸ்தலம். ஆயுர்வேத நகரம். அங்கு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் இந்தியா முழுவனும் பிரபலம். அங்குள்ள ஆயுர்வேத சாலையில்தான் ஸ்ரீஜித் வேலை செய்துவந்தான். அவன் வீட்டில் மூன்று மணிநேரம் இருந்தேன். அவன் வீடு பாரம்பரிய பழைய வீடு. நல்ல உணவும் கிடைத்தது. சேஷம், வீட்டை ஒட்டி உள்ள பசுமை நிறைந்த இடங்களை சுற்றிப் பார்த்தோம்.

அதன்பின் என் அடுத்த பயணம் திரிச்சூர் நோக்கி.....

அங்கே சீக்கோ ஜோஸ் வீட்டிற்கு சென்றேன். அங்கே இரண்டு மணி நேரம் இருந்தேன். இதுவரை என்னோடு வந்த பிரோஸ் தன் ஊருக்கு புறப்பட்டான். சேஷம், நானும் சீக்கோவும் அரிகில் உள்ள ரெயில் ட்ராக்கிற்கு சென்றோம். ஒரு மணி நேரம் அரட்டை. சேஷம், அவன் பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பினான்.

அங்கிருந்து பாலக்காடு ரயில் நிலையம் சென்று தீவண்டி பிடித்தேன்.வழிநெடுக கேரள நினைவுகளை அசைபோட்டபடி தமிழகம் நோக்கி புறப்பட்டேன்.......

14.8.07

8.8.07

மரணம்

மரணம் - நம் கடைசி உறக்கம்.
இனி எழவே இயலாத கடைசி கண் மூடல்
வாழ்வின் துன்பங்களில் இருந்து நிரந்தர விடுதலை.
யாருமே விரும்பாத முடிவுரை.

ஆம். மரணம் நாம் யாருமே விரும்பாத- ஏற்றுக்கொள்ள விரும்பாத முடிவுரை.

ஏன் மரணம் நம்மால் எற்றுக்கொள்ள படுவது இல்லை?

ஒரு நாவலை படிக்கிறோம். முடிவை அறிந்து கொள்ள துடிக்கிறோம்.

ஒரு சினெமாவை பார்க்கிறோம். முடிவை ரசிக்கிறோம்.

பின், வாழ்வில் மட்டும் ஏன்?

எனக்கு சற்று அதிகமாகவே மரண பயம் இருந்தது. காரணம்.. சிறு வயதில் இருந்தே அருகில் இருந்து பார்த்ததில்லை.... பயந்து விடுவேன் என்று என் அப்பா என்னைப் பார்க்க விட்டதில்லை. ஒரு பிணத்தைக்கூட அருகில் நின்று கண்டதில்லை. அதனால் சிறு வயதில் இருந்தே மரணம் பற்றிய அறிமுகம் இல்லாமல் போய் விட்டது.

ஆனால் இப்போதோ எராளமான சாவுகளை நேரில் பார்க்க நேரிடுகிறுது. மரணம் பற்றிய பயம் இப்போதுதான் மெல்ல ஏற்படுகிறது.

கடந்த இரு வருடங்களில் என்னை பாதித்த மரணங்கள் ஏராளம்.

* என் ப்ரிய நண்பனின் தற்கொலை

* மாணவர் விடுதியில் ஒரு மாணவனின் தற்கொலை

* என் நெருங்கிய உறவினர் ஒருவரின் அகால மரணம் (பேருந்து விபத்து)

* கும்பகோணம் தீ விபத்து

* சமீபத்தில் இரு பள்ளி மாணவர்களின் அகால மரணம் (மிதிவண்டி-மகிழுந்து மோதல்)

* என் நண்பனின் தாயார் மரணம்


இதில் என்னை மிகவும் பாதித்தது.... முதல் மரணமும்... கடைசி மரணமும்...

அவ்வளவு தன்னம்பிக்கை உள்ளவன் என் நண்பன். அவனின் தற்கொலை என்னால் ஜீரணிக்க இயலாத ஒன்று.

இன்னொறு நண்பனின் தாயார் மரண சமயத்தில், நண்பனைப் பார்த்தபோது அதிர்ந்து விட்டேன். அவ்வளவு உற்சாகமானவன் ஒடிந்து போய் காணப்பட்டான்.

மரணம் என்று வந்தால் எல்லாம் காணாமல் போய் விடுமா? தன்னம்பிக்கை, உற்சாகம் எல்லாம் எங்கே போனது? எல்லாவற்றையும் புரட்டி போடும் வல்லமை மரணத்திற்கு மாத்திரம் உண்டு என்ற உண்மை அப்போதுதான் புரிந்தது.

ஆனால் இப்போதுதான் வாழ்க்கையை என்னால் ரசிக்க முடிகிறது. என் ஒவ்வொரு நிமிடத்தையும் உற்சாகத்தோடு வாழ்கிறேன். என்னை சுற்றி இருப்பவர்களை முடிந்த அளவு மகிழ்ச்சிப்படுத்துகிறேன்.
முடிந்த அளவு மற்றவர்க்கு உதவுகிறேன்.

மரணம் - வாழ்வதற்கான நம்பிக்கையை தந்திருக்கிறது

வாழ்வது ஒரே ஒரு முறை. அதை நல்லபடியாக வாழ்ந்து முடிப்போமே.... சரிதானே நண்பர்களே....

30.7.07

வட்டார வழக்கு ஒரு மொழிக்கு அவசியமா?




மொழி - மனிதன் படைத்த அற்புதமானவைகளில் ஒன்று.

மொழிகள் மட்டும் இல்லையென்றால் வாழ்க்கையில் ஸ்வாரஸ்யம் என்ற ஒன்று இல்லாமல் போயிருக்கும்.

வாழ்க்கையை அழகுபடுத்துவது மொழி என்பது என் தாழ்மையான கருத்து.

மொழியை இலக்கண சுத்தமாக பேசுவது சரியா? இல்லை எப்படி வேண்டுமென்றாலும் பேசலாமா? அதாவது வட்டார வழக்கில் பேசுவது சரியா?

இதற்கு ஏராளமான கருத்துபேதங்கள் உண்டு.

* மொழியை இலக்கண சுத்தமாக பேசும்போது தான் அதன் மதிப்பு உயர்கிறது என்பது ஒரு சாரார் கருத்து.

* மொழி என்பது ஒரு தொடர்பு சாதனம் மட்டுமே. அதை எப்படி பேசினால் என்ன? மற்றவர்க்கு புரிந்தால் சரி என்பது இன்னொரு சாராரின் கருத்து.

என்னுடைய கருத்து என்ன தெரியுமா?

மொழி வெறும் தொடர்பு சாதனம் மட்டும் அல்ல. அது ஆன்மா... ஜீவன்... வாழ்க்கை. ஆன்மா இல்லையென்றால் எப்படி வாழ முடியாதோ அப்படியே மொழியும் இன்றி இந்த உலகம் இயங்காது.

வட்டார மொழி என்பது வண்ணங்கள் போன்றது. எராளமான வர்ணங்கள் இருந்தால்தான் இந்த உலகை ரசிக்க முடியும். வெறும் கருப்போ, வெள்ளையோ, பச்சையோ இருந்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள். நன்றாக இருக்குமா என்ன? எல்லாம் இருந்தால் தான் ஸ்வாரஸ்யமே.

வட்டார வழக்கு எந்த மொழிக்கு அதிகமாக இருக்கிறதோ அதுவே சிறந்த மொழி என்பது என் கருத்து. தமிழில் தான் எத்தனை வட்டார வழக்குகள். அதனால்தான் அது இன்றும் உலக மொழிகளில் உயர்ந்து நிற்கிறது. வட்டார வழக்கு இல்லாத மொழி நிலைத்து நின்றது இல்லை. அதற்கு உதாரணம்... சமஸ்கிருதம்.


நண்பர்களே... உங்கள் வட்டார வழக்கில் பேச வெட்கப்படாதீர்கள். அதுதான் அழகு. அதுதான் ஜீவன். அதுதான் உங்கள் தனித்தன்மை.... அதை இழந்து விடாதீர்கள்....

17.7.07

AMISH - PEOPLE & THEIR CULTURE


AMISH are anabaptist christian denomination in the united states and canada. they are known for their plain dress and limited use of modern conveniences such as automobiles and electricity.

The Amish originated in 1693 – 97 as followers of the Mennonite Jakob Ammann in Switzerland, Alsace, and Germany.

Migration to North America and assimilation eliminated the Amish in Europe. They settled in Pennsylvania in the 18th century.

After 1850 they split into "Old Order" (traditional) and "New Order" (now the Mennonite churches).

Old Order Amish now live in Pennsylvania, Ohio, Indiana, Iowa, Illinois, and Kansas. Adults are baptized and admitted to formal church membership at age 17 to 20.
Though similar in theology to Mennonites, Amish wear modest, old-fashioned clothing and generally reject modern technology, including automobiles and telephones.

* they speak german dialect known as pennsylvania deutsch.
* they do not join the military.
* they do not accept any form of financial assistsnce from the government.
* they use plain dress only.
* they are farmers and follow traditional methods only.
* they use horses for farming and transportation.
* they wont allow new technologies like TV, Telephone, car, electricity to their village.
* they are mennonite christians and have their own belief.
* they marry within their amish community.
* they have no separate churches. they meet in private homes.
* they operate their own schools (called as "one-room schools')with teachers of their own community.
* they are trilinguals ( they speak pennsylvania deutsch in their home and high german in their services and english for outside world.)
they teaching stresses humility, family and community and follows the belief that God intends families to stick together without dilution from the influences of the wider world.
Their sober dress code is an expression of their faith.
Women cover flesh with long skirts and long sleeves.
Men and boys are expected to wear dark suits with braces.
No zippers are allowed and men can only grow beards once they are married.

MY LATEST FAVOURITE SONG

My latest favourite song is ..... "ANISUTHIDE" from a Kannada film
MUNGARU MALE

ee songu nanikku tumbaa ishtaagithe




Singer of this song is sonu nigam. Its mindblowing. Picturisation of this song is also good.

Here it is... the song .... word by word

Anisuthide Yaako InduAnisuthide yaako indu
Neeneyne nannavalindu
Maayadaa lokadinda
Nanagaage bandavalindu
Aahaa yentha madhura yaathane
Kollu hudugi omme nanna, haage summane

Suriyuva soneyu sooside ninnade parimala
Innyara kanasulu neenu hodare talamala
Poorna chandira rajaa haakida
Ninnaya mogavanu kanda kshanaa…
Naa khaidi neeney seremane
Tabbi nanna appiko omme…. haage summane

Anisuthide yaako indu
Neeneyne nannavalindu
Maayadaa lokadinda
Nanagaage bandavalindu
Aahaa yentha madhura yaathane
Kollu hudugi omme nanna, haage summane

Tutigala hoovali aadada maathina sihiyide
Manasina putadali kevala ninnade sahiyide
Haneyali bareyada ninna hesara
Hrudayadi naane korediruve
Ninagunte idara kalpane
Nanna hesara kooge omme… haage summane

Anisuthide yaako indu….
Neeneyney nannavalindu….
Maayadaa lokadinda
Nanagaagi bandavalindu
Aahaa yentha madhura yaathaney
Kollu hudugi omme nanna, haage summane

27.6.07

மலையாளம்- அழகிய மொழி


தமிழைப் போன்று மிகவும் இனிமையான மொழி மலையாளம். அந்த மொழியை யார் பேசினாலும் அதை மிகவும் ரசித்துக் கேட்பேன்.

நான் மிகவும் ஆசைப்பட்டு கற்றுக் கொண்ட மொழி மலையாளம்.

சமஸ்கிருதத்தின் ஸ்வாரஸ்யம்.......

தமிழின் அழகு.......

மலையாளத்திற்கென்றே உள்ள சில சிறப்பம்சங்கள்......

இவற்றின் சரியான கலவை....... மலையாளம்.

மலையாளத்துடனான என் ப்ரியம் 10 வருடங்கள்.... இன்னும் ஒரு துளி கூட ஆர்வம் குறையவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.

'ழ' - தமிழ் மற்றும் மலையாளத்தில் மாத்திரம் உள்ள எழுத்து. அது தமிழற்களை விட மலையாளிகளால் மிக அழகாக உச்சரிக்கப்படுகிறது.
தமிழில் நாம் கேட்கின்ற அதே வார்த்தைகள் இன்னும் ஸ்வாரஸ்யமாக.... அழகாக மலையாளத்தில் உச்சரிக்கப்படும்.

நண்பர்களே.... தமிழின் அழகை இன்னொறு கோணத்தில் ரசிக்க ஆசை உண்டா உங்களுக்கு?? அதற்கு சரியான வழி.... மலையாளம் தான்......

18.6.07

எஸ்.ராம கிருஷ்ணன் - எனக்குப் பிடித்த எழுத்தாளர்


தமிழில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்களுள் தனித்தன்மை வாய்ந்த எழுத்தாளர் - எஸ்.ராம கிருஷ்ணன்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆனந்த விகடனில் மட்டுமே அவரின் எழுத்தை வாசித்து இருக்கிறேன். அதிலேயே அவரின் ரசிகன் ஆகிவிட்டேன்.

அவர் வார்ததைகளில் வர்ணஜாலம் புரிவதில்லை. பரபரப்பாக எழுதுவதில்லை. அப்படியெனில் வேறென்ன இருக்கிறது அவரிடம்?

இயல்பான விவரிப்பு.... யதார்ததம்..... அவரின் எழுத்துடனே பயணிக்க வைக்கும் லாவகம்.... என சொல்லிக்கொண்டு போகலாம்.

அதிலும் குறிப்பாக அவர் பயணங்களில் ஆர்வம் நிறைந்தவர். அந்த பயணங்களில் நடந்த அனுபவங்களை விவரிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

மனித உணர்வுகளையும் யதார்த்தமாய் எழுதுவது இவர் சிறப்பு.

இவரின் 'துணையெழுத்து' , 'தேசாந்திரி', 'கதாவிலாசம்' அருமையான நூல்கள். இப்போது இவர் விகடனில் எழுதும் 'கேள்விக்குறி' யும் சிறப்பான தொடர்.

இவரின் மற்ற 'உப பாண்டவம்', 'நெடுங்குருதி' முதலான நூல்களையும் படிக்க காத்திருக்கிறேன்.

இவரின் இணைய முகவரி... http://www.sramakrishnan.com/

14.6.07

ரஜினி ரசிகர்களே.....


வெள்ளியன்று சிவாஜி படம் வெளியாகிறது. அதைப் பற்றித்தான் எவ்வளவு சுவாரசியமான தகவல்கள்.... எத்தனை வதந்திகள்..... எல்லாம் ரஜினியை சுற்றியே... ரஜினிக்கு 15 கோடி சம்பளம்... ஏவி.எம்மிற்கு 20 கோடி லாபம்... திரையரங்கு அதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்... இசைத்தட்டு விற்பனையில் சாதனை... இப்படி எல்லாருக்கும் லாபம். ஆனால் ரசிகர்களுக்கு????? நூறு ருபாயிலிருந்து ஆயிரம் வரை நஷ்டம் தான்.

இரவு 9 மணியளவில் திரையரங்கு பக்கம் சென்றேன். ஒரே திருவிழா கோலம். வினைல் போர்டுகள் சுற்றியும் உள்ளன.அப்போது எனக்கு தோன்றியது என்னவென்றால்... இத்தனை செலவு எதற்கு செய்ய வேண்டும்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? படம் பார்த்த சந்தோஷம் மட்டும் மிச்சம்....

ஆனால் இன்னொறு கோணத்திலும் யோசித்தேன். தமிழற்களுக்கு... ஏன் இந்தியர்களுக்கு ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவர்களை உச்சியில் வைத்து கொண்டாடுவார்கள். க்ரிக்கெட், சினிமா, டி.வி, அரசியல், விளையாட்டு, எழுத்து என எதில் இருந்தாலும் கொண்டாடுவார்கள். ஒரே விசயம்... அந்த நபர் மக்களை கவர வேண்டும்.ரஜினியை பற்றி நான் என்ன சொல்ல... அவரைப் போன்று மக்களை கவர்ந்த சமகால நடிகர் வேறு யாரும் இல்லை.

இந்த கொண்டாட்டங்களை இதோடு ரசிகர்கள் நிறுத்தினால் பரவாயில்லை. பாலாபிஷேகம்... கலாட்டா, அடிதடி, வெறி, கொலை இவை இல்லாத தினமாக ரிலீஸ் தினம் இருக்க வேண்டும்.யாரோ சம்பாதிக்க நாம் ஏன் முட்டி மோதிக்கொள்ள வேண்டும். ரஜினி ரசிகர்களே!!! உங்கள் தலைவர் படத்தை ரசியுங்கள்.ஆர்ப்பரியுங்கள். கொண்டாடுங்கள்.ஆனால் வேறு ஒன்றும் வேண்டாமே....

6.6.07

WORLD ENVIRONMENTAL DAY.......


yesterday ... it is world environmental day (WED), which create awareness of the environment to the people and enhance the political attention and action.

----------------------------
for this 2007 WED slogan is
melting ice- a hot topic?
this slogan focuses on the effects that climate change is having on polar ecosystems and communities and the resulting consequences
around the world.

----------------------------

do u know... when did this WED begin?


It was established by the United Nations General Assembly in 1972 to mark the opening of the Stockholm Conference on the Human Environment.

-----------------------------------------------------------------------------

The important environmental issues are.... global warming, different types of pollution, solid wastes, plastics, population growth.


-----------------------------------------------------------------------------

What is your resolution for this world environmental day????

-----------------------------------------------------------------------------


Slogan for the previous years are:

2006 - Deserts and Desertification - Don't Desert Drylands!
2005 - Green Cities – Plan for the Planet!
2004 - Wanted! Seas and Oceans – Dead or Alive?
2003 - Water – Two Billion People are Dying for It!
2002 - Give Earth a Chance
2001 - Connect with the World Wide Web of Life
2000 - The Environment Millennium - Time to Act
1999 - Our Earth - Our Future - Just Save It!
1998 - For Life on Earth - Save Our Seas
1997 - For Life on Earth
1996 - Our Earth, Our Habitat, Our Home
1995 - We the Peoples: United for the Global Environment
1994 - One Earth One Family
1993 - Poverty and the Environment - Breaking the Vicious Circle
1992 - Only One Earth, Care and Share
1991 - Climate Change. Need for Global Partnership
1990 - Children and the Environment
1989 - Global Warming; Global Warning
1988 - When People Put the Environment First, Development Will Last
1987 - Environment and Shelter: More Than A Roof
1986 - A Tree for Peace
1985 - Youth: Population and the Environment
1984 - Desertification
1983 - Managing and Disposing Hazardous Waste: Acid Rain and Energy
1982 - Ten Years After Stockholm (Renewal of Environmental Concerns)
1981 - Ground Water; Toxic Chemicals in Human Food Chains
1980 - A New Challenge for the New Decade: Development Without Destruction
1979 - Only One Future for Our Children - Development Without Destruction
1978 - Development Without Destruction
1977 - Ozone Layer Environmental Concern; Lands Loss and Soil Degradation
1976 - Water: Vital Resource for Life
1975 - Human Settlements
1974 - Only one Earth


2.6.07

Language is my passion

"You live a new life for every new language you speak.If you know only one language, you live only once." - Czech proverb



I love languages. I wonder the letters & sounds of languages.I want to learn all Indian languages. It's my ambition.



At present, I know Tamil, English, Malayalam very well (I think so). And also I can able to read and write the following languages.... Kannada, Telugu, Hindi, Urdu, Arabic, German.

31.5.07

my first post

hai friends.....

welcome u all. here i share more about languages, cultures, book reviews, poems and ofcourse cinema....

so welcome u all once again... read and post your comments....

thank u

with love...... SUKUMAR